செய்திகள்

6வது நாளாக தொடர் போராட்டம்: செவிலியர்கள் கைது

சென்னை, டிச. 23– 6 வது நாளாக கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறை கைது செய்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தங்களது துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 18 ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளருடன் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது. அதைத் […]

Loading

செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து ஒரு கோடி பேர் உயிரை காப்பாற்றினேன் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், டிச. 23– இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து இதுவரை 1 கோடி பேர் உயிரை காப்பாற்றி உள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா–உக்ரைன் போர் மட்டும் தான் என்றும் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையே பெரும் பகை உள்ளது. […]

Loading

செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் கவுன்டவுன் துவங்கியது

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 23– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை ‘புளூபேர்ட்’ என்னும் அமெரிக்க செயற்கைக்கோள் எல்.வி.எம்.3–எம்.6 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்–6’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன் அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் […]

Loading

செய்திகள்

பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை அருள் எம்.எல்.ஏ. பேட்டி

திண்டிவனம், டிச. 23– பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை என்று அருள் எம்.எல்.ஏ. கூறினார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடலூர், சேலம் உள்ளிட்ட 20 தொகுதி நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பா.ம.க.இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். […]

Loading

செய்திகள்

நிதி மேலாண்மை, தரவு சார்ந்த முடிவெடுப்பதில் கணிதத்தின் பயன்பாடு தேசிய பங்குச்சந்தை தலைமை நிபுணர் தீர்த்தங்கர் பட்நாயக் விளக்கம்

சென்னை, டிச. 23– ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகழ்பெற்ற கணிதவியலாளர் ராமானுஜனின் 138வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய கணித தினம் – 2025 ஐ சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதுநிலை கணிதத் துறையின் “Math π Rates” கிளப், உள் தர உறுதி குழு (IQAC) இணைந்த நடத்தி இந்த நிகழ்ச்சி கல்வியிலும் அன்றாட வாழ்விலும் கணிதத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் முதன்மை நோக்கமாக இருந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா […]

Loading

செய்திகள் முழு தகவல்

இறந்தவர்கள் வந்து இனி ஓட்டுபோட முடியாதே என பயம் வந்துவிட்டது எடப்பாடி பேட்டி

சேலம், டிச. 22: எஸ்.ஐ.ஆரை பார்த்து ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார், கதறுகிறார் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம்” என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் எம்.எல்.ஏ. திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசும்போது கூறியதாவது:– […]

Loading

செய்திகள்

த.வெ.க. சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட பாதரியார்களுக்கு தவெக தலைவர் விஜய் சால்வை போர்த்தி கெளரவித்தார். மேடையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதரியார்கள் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், தவெக நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், க்யூ-ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

மதுரை, டிச. 22: திருப்பரங்குன்றத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், பொதுமக்கள் உள்பட 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் நேற்று கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் தெரு குடியிருப்பு வாசிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருநகரில் உள்ள தனியார் […]

Loading

செய்திகள் முழு தகவல்

‘ரிமோட்’ நீர்மூழ்கிக் கலம் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித் தன்மை ஆய்வு துவங்கியது

சென்னை, டிச. 22: முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை இன்று ‘ரிமோட்’ நீர்மூழ்கிக் கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நெல்சாகுபடி நடக்கிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பதுடன், பாசனத்திற்கு போக உபரியாக வைகை அணைக்கு திறக்கப்படும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய பணிகளும் நடக்கிறது. […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ‘மதி உணவுத் திருவிழா’: உதயநிதி துவக்கினார்

சென்னை, டிச. 22: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் மதி உணவுத் திருவிழாவை திறந்து வைத்து பார்வையிட்டு, பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்தார். உணவுத் திருவிழாவில், 235–க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், […]

Loading