செய்திகள்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதா திருப்பி அனுப்பிய ஜனாதிபதி

சென்னை, டிச. 30: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பான சட்டசபை சட்ட திருத்த மசோதாவை ஜனாதிபதி 3 ஆண்டுகளுக்கு பின் திருப்பி அனுப்பினார். தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை, வேந்தரான கவர்னரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு […]

Loading

செய்திகள்

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு நிறைவு விழா

சென்னை, டிச. 30: சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், வேல்ஸ் கல்வி குழும தலைவர் ஐசரி கே கணேஷ் கலந்துகொண்டனர். சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 27-ந் தேதி இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு தொடங்கியது. மாநாட்டை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் எஸ்.மகேந்திர தேவ் தொடங்கி வைத்தார். […]

Loading

செய்திகள்

ராணிப்பேட்டை சியாம்பாடியில் புதிய ரேஷன் கடை: அமைச்சர் காந்தி திறந்தார்

ராணிப்பேட்டை, டிச. 30: கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திமிரி ஊராட்சி ஒன்றியம், ஆயிரமங்கலம் ஊராட்சி சியாம்பாடி கிராமத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.19.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ராணிப்பேட்டை […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் : ஸ்டாலின் உத்தரவு

சென்னை, டிச. 29: கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் அய்யாக்கண்ணு என்பவரின் மகன் ராஜகோபால் (வயது 57) என்பவர் நேற்று (28–ந் தேதி) காலை தனக்குச் சொந்தமான கிணற்றில் உள்ள விவசாய மின்மோட்டாரினை விவசாயத்திற்காக இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஒரு கண்டுபிடிப்பு… ௹ ஒரு லட்சத்தை தாண்டிய பங்கு… டிசம்பர் 29 ஒரு வரலாறு

1990ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் ரூ.332 என்ற விலையில் பரிமாறப்பட்ட எம்.ஆர்.எப் (MRF) பங்கு, 2000 ஆம் ஆண்டில் ரூ.2,820 ஆக உயர்ந்தது. இந்தியாவின் வாகன மற்றும் வர்த்தக வாகனத் துறை விரிவடைந்த 2010 களில் இந்த பங்கின் வளர்ச்சி வேகம் பெற்றது. 2020ஆம் ஆண்டில் ரூ.70,964 என்ற அளவுக்கு சென்ற எம்.ஆர்.எப் பங்கு, 2021ஆம் ஆண்டு ரூ.1 லட்சத்தைத் தாண்டி, இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் அந்த சாதனையை நிகழ்த்திய முதல் பங்காக மாறியது. இந்த அபாரமான உயர்வுக்கு […]

Loading

செய்திகள்

ரஷ்யா– உக்ரைன் அமைதி ஒப்பந்தம்

வாஷிங்டன், டிச. 29: ரஷ்யா–உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான 4 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமைதி ஒப்பந்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்துப் பேசினர். […]

Loading

செய்திகள்

மெக்சிகோவில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, டிச. 29: மெக்சிகோவில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர். மெக்சிகோ நாட்டின் ஒக்சாகா மற்றும் வெராகுரூஸ் மாகாணங்களுக்கு இடையே இன்டர்ஓஷெனிக் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பசிபிக் பெருங்கடலுடன் மெக்சிகோ வளைகுடாவை இணைக்கிறது. இந்த ரெயில் நிசாண்டா நகரத்தின் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் […]

Loading

செய்திகள்

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தி.மு.க. அரசு படுதோல்வி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை, டிச. 29: தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு […]

Loading

செய்திகள்

சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, டிச. 29: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Loading

செய்திகள்

பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

திருப்போரூர், டிச. 29: பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார். 6வது கட்டமாக நேற்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள இஜ்திமா திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் […]

Loading