செய்திகள்

சென்னையில் மின்சார ரெயில் மீது கல்வீச்சு: 3 பயணிகள் காயம்

சென்னை, ஜன. 5: திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. வியாசர்பாடி அருகே அந்த ரெயில் வந்தபோது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த சம்பவத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இ-பைலிங் கருத்துக்கேட்பு கூட்டம்

விழுப்புரம், ஜன. 5: விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், இ–-பைலிங் (மின்னணு வழக்கு தாக்கல்) முறையை மேலும் எளிமைப்படுத்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சென்னை ஐகோர்ட் நீதிபதியும், விழுப்புரம் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான ஆஷா கலந்து கொண்டு இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து வக்கீல்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். அப்போது, வக்கீல்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் தீர்வு வழிமுறைகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம், […]

Loading

செய்திகள்

மாவட்ட செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை, ஜன. 5– மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் 9–ந்தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் […]

Loading

செய்திகள்

நெமிலிச்சேரி சந்திப்பில் ரவுண்டானா கட்டும் பணி: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், டிச. 5: நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளை கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் வைத்து துவக்கி வைத்தார். திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை […]

Loading

செய்திகள்

கனிமொழிக்கு ஸ்டாலின் அமித்ஷா, விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன.5– தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தி்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா, த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யு.மான கனிமொழி இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

சென்னை, ஜன. 5– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பாதுகாப்பு கருதி, பெரிய முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3–ந்தேதி காலையில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து காணப்பட்ட நிலையில், மாலையில் ரூ.640 […]

Loading

செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க செயற்கை நுண்ணறிவு ‘போர்ட்டல்’: முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம்

சென்னை, ஜன. 4: தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ‘போர்ட்டலை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மொத்தம் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர். இதன் தொடக்க நிகழ்வாக சென்னை […]

Loading

செய்திகள்

த.வெ.க. கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி: செங்கோட்டையன் உறுதி

கோவை, ஜன. 4: த.வெ.க. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கே.ஏ.செங்கோட்டையன் கூறினர். தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எதிர்காலத்தில் புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாக தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும். உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அதில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

“சர்வதேச சட்டமீறல்” : டிரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

நியூயார்க், ஜன. 4: அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். இது சர்வதேச சட்டமீறல் என்று அதிபர் டிரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்ட நிக்கோலஸ் மதுரோ நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன. இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. நியூயார்க் நகர மேயர் […]

Loading

செய்திகள்

‘‘இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்:” ‘ஜனநாயகன்’ ரிலீஸ் குறித்து சிவகார்த்திகேயன்

சென்னை, ஜன. 4: இந்த பொங்கல் அண்ணன் – தம்பி பொங்கல் என்று ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான […]

Loading