செய்திகள்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை, ஜூலை 4– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள்மற்றும்பயறு வகைத் தொகுப்புகளைவழங்கினார். மேலும், 103 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை […]

Loading

செய்திகள்

“மக்கள் குரல்-’’ ஆசிரியர் எம்.எஸ். 98வது பிறந்த நாள்; கண் மருத்துவ முகாம்

சென்னை, ஜூலை 4 “மக்கள் குரல்- – ட்ரினிட்டி மிரர்”- பத்திரிகைகளில் நிறுவன ஆசிரியர் எம் சண்முகவேலின் (எம்.எஸ்) 98 ஆவது பிறந்தநாள் விழா, மக்கள் குரல் அலுவலகத்தில் இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் குரல்- – ட்ரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர். முத்துக்குமார், செயல் இயக்குனர் பி. ஜீவானந்தம், ஆசிரியர் குழு, நிர்வாகம் -அச்சுப் பிரிவு ஊழியர்கள் அனைவரும் ஆசிரியரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஆசிரியர் ஆர். முத்துக்குமாரின் தாயாரும், நிறுவன […]

Loading

செய்திகள்

ரிதன்யா தற்கொலை : ஜாமீன் மனு மீதான விசாரணை 7 ந் தேதிக்கு ஒத்திவைப்பு

திருப்பூர், ஜூலை 4– ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான கணவர், மாமனார் ஜாமின் கோரிய மனுவுக்கு எதிராக ரிதன்யாவின் பெற்றோர் தாக்கல் செய்த இடையீட்டு மனு விசாரணையில், கால அவகாசம் கேட்டதால், விசாரணை வரும் 7 ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28 ந்தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் […]

Loading

செய்திகள்

மேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: காதலன் உள்பட 3 பேர் கைது

மேலூர், ஜூலை 4– மேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.அதன்படி நேற்றிரவு தீபன்ராஜ் அந்த பெண்ணை தனியாக […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையம்:

சென்னை, ஜூலை 4– மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையத்தை மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் துவக்கி வைத்தார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பணிபுரியும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் கோயம்பேடு பணிமனையில் இயக்கத்துறையின் பிரத்யேக பயிற்சி மையத்தை தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், 2007-ல் நிறுவப்பட்டு, 2015-ஆம் ஆண்டு முதல் பயணிகள் சேவையைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. […]

Loading

செய்திகள்

ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்கும் இந்தியா

பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் புதுடெல்லி, ஜூலை.4-– ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியா வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய முப்படைகளை வலுப்படுத்த மிகப்பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. அந்தவகையில் 10 மிகப்பெரிய கொள்முதல் பரிந்துரைகளுக்கு ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கெள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு ஒப்புதல் […]

Loading

செய்திகள்

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடல்

வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய் அரியலூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் அரியலூர், ஜூலை 4– குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடலை தெரு நாய் வாயில் கவ்வி கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ். மாத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள குப்பை மேட்டில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்துள்ளது. […]

Loading

செய்திகள்

அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு

சிவகங்கை, ஜூலை 4– அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை […]

Loading

செய்திகள்

வெளியுறவுத்துறை இணை செயலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு

நாகர்கோவில், ஜூலை. 4- போர் சூழ்நிலை காரணமாக ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என வெளியுறவுத்துறை இணை செயலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை மனு கொடுத்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று டெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளர் ஆனந்த் பிரகாஷை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஈரான் […]

Loading

செய்திகள்

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை: கெஜ்ரிவால் திட்டவட்டம்

ஆமதாபாத், ஜூலை.4-– காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை என கெஜ்ரிவால் திட்டவட்டமாக கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வந்த ஆம் ஆத்மி, இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால் பின்னடைவை சந்தித்து இருந்த ஆம் ஆத்மிக்கு, சமீபத்தில் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது. குறிப்பாக பஞ்சாப்பில் இடைத்தேர்தல் நடந்த ஒரு தொகுதியையும், குஜராத்தில் 2 தொகுதிகளில் நடந்த தேர்தலில் ஒரு […]

Loading