செய்திகள்

தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜூலை 7– இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தனித்துவமான ஆளுமை இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … அறுவடைத் திருவிழா…! … விழா 13 ராஜா செல்லமுத்து

செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் […]

Loading

90 வது பிறந்த நாளை கொண்டாடும் தலாய் லாமா
செய்திகள்

மக்களின் மனதில் ஒளிரும் பேரொளி: 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் தலாய் லாமா!

“அமைதி என்பது வெறும் எதிரிகளை தவிர்ப்பது அல்ல, அது உள்மன அமைதியை அடையும் பயணமாகும்.” – தலாய் லாமா உலக அமைதியின் மாபெரும் தூதராகவும், கருணையும், மத சகோதரத்துவத்தையும் எடுத்துரைக்கும் ஆன்மீக தலைவராகவும் புகழ்பெற்ற தலாய் லாமா, இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தரம்சாலா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான பக்தர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்துவருகின்றனர். […]

Loading

BRICS
செய்திகள்

‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 6– ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா, டிரினிடாட் அண்ட டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக, பிரேசிலுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, ​​இந்திய புலம் பெயர்ந்தோர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு […]

Loading

கனமழை
செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி

நியூயார்க், ஜூலை 6– அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 32 பேர் வெள்ளத்தில் பலி மேலும் வெள்ளப்பெருக்கு […]

Loading

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு
செய்திகள்

திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு: குவியும் பக்தர்கள்

டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு தூத்துக்குடி, ஜூலை.6- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடைபெறவிருக்கும் குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு […]

Loading

செய்திகள்

பெண் போலீசாரை பொதுவான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தாதது ஏன்? டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை, ஜூலை.6- பெண் போலீசாரை பொதுவான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தாதது ஏன்? என்பது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-– தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 30.6.2025 அன்று காணொலி வாயிலாக மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வின்போது, பாதுகாப்பு பணிகளுக்கு அதிக பெண் போலீசாரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். ‘போக்சோ’ குற்றங்கள் மற்றும் […]

Loading

செய்திகள்

நிரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் அதிரடி கைது

புதுடெல்லி, ஜூலை.6-– பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடினர். இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விவகாரத்தில் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … நவராத்திரி விழா ….! …. விழா – 12 ராஜா செல்லமுத்து

அன்று சுந்தரியின் வீட்டில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.அதுவரையில் இல்லாத அளவிற்கு வீட்டைச் சுத்தம் செய்தாள் சுந்தரி. கொலுப்படிகளில் விதவிதமான கொலுப்பொம்மைகளை அடுக்கி வைத்தாள். ஒரே இடத்தில் அத்தனை பொம்மைகளையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களைப் பொம்மையின் காட்சிகளாக வைக்க வேண்டும். ஊர் , உறவுகள் நண்பர்களிடம் சொல்லி, இந்த நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும், விழா தொடங்கும் ஒன்பது நாட்களுக்கும் […]

Loading

யானை தந்தத்தை விற்க முயன்ற 8 பேர் கைது
செய்திகள்

ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை விற்க முயன்ற 8 பேர் கைது

செங்கல்பட்டு, ஜூலை.6- ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை கடத்தி விற்க முயன்ற பெண் உள்பட 8 பேரை செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே வனத்துறையினர் கைது செய்தனர். சென்னை ஜமாலியா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 57). இவர் கடந்த 1983-ம் ஆண்டு நைஜீரியா நாட்டுக்கு வேலைக்காக சென்றார். அப்போது, அங்கு யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர், அங்கிருந்து 2 யானை தந்தங்களை தமிழகத்துக்கு கடத்தி வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதை […]

Loading