செய்திகள்

114 குதிரைகள் சூழ உற்சாக வரவேற்பு; மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது

பிரேசிலியா, ஜூலை 9– பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய “கிராண்ட் காலர் ஆப் நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சவுதர்ன் கிராஸ்” விருது வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 5 நாடுகள் பயணத்தின் ஒரு கட்டமாக பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரியோ டி ஜெனீரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, பிரேசிலியா நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபரின் […]

Loading

செய்திகள்

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஐகோர்ட் ஜாமீன்

சென்னை, ஜூலை.9- நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பிரதீப்குமார் என்பவர் கைதானார். மேலும் அவருக்கு போதைப்பொருளை சப்ளை செய்த ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் என்பவரும் ஓசூரில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் சிக்கினார். இதனையடுத்து ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் அளித்த […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை, ஜூலை 9– சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் கமிஷனர் அருண் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி […]

Loading

செய்திகள்

நெய்வேலி புத்தகத் திருவிழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுகள்

கடலூர், ஜூலை 9– கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 24ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்தற்காகவும் மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்திட உத்தரவிட்டுள்ளார். புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல ஒரு பொது நிறுவனம் நெய்வேலியில் ஒவ்வொரு […]

Loading

செய்திகள்

நாளை முதல் கப்பலூர், சாலைப்புதூர், நாங்குநேரி எட்டுர்வட்டம் சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூலை.9- சுங்கச்சாவடிகளுக்கான நிலுவைத்தொகை ரூ.276 கோடியை அரசு போக்குவரத்து கழகம் செலுத்தாததால் தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைவு

சென்னை, ஜூலை 9– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9000 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து சவரன் ரூ.72 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.480 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற […]

Loading

செய்திகள்

டாலர் தான் ராஜா; அதனை அழிக்க பிரிக்ஸ் அமைப்பு முயற்சிக்கிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன், ஜூலை 9– அனைத்து நாடுகளுக்குமான வர்த்தகத்துக்கு ”டாலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. கடும் விளைவுகளை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:– பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக இருந்தாலும், விரைவில் 10 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. நமது […]

Loading

செய்திகள்

நெல்லையிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் புகை

திண்டுக்கல்: நெல்லையிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் திண்டுக்கல் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது திடீரென ஏ.சி.யில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏ.சி.யில் இருந்து புகை கிளம்பியதால் வடமதுரை அருகே வேல்வார்கோட்டை என்ற இடத்தில் அரை மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு […]

Loading

செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அண்ணா தி.மு.க. கூட்டணி இடையே தான் போட்டி: திருமாவளவன்

சென்னை, ஜூலை.9- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அண்ணா தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரி விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக அவரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். அப்போது பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, […]

Loading

செய்திகள்

ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்

மும்பை, ஜூலை 9– ஹோமியோபதி மருத்துவர்களும், அலோபதி சிகிச்சை அளித்து, அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்ற மகாராஷ்டிரா அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30–ந்தேதி அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவத்தில் பயிற்சி பெறுவதற்காக நவீன மருந்தியலில் சான்றிதழ் படிப்பை (CCMP) படிக்க மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது ஹோமியோபதி மருத்துவர்கள் […]

Loading