செய்திகள்

பாகிஸ்தானில் அதி கனமழை: பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், ஜூலை 17– பாகிஸ்தானில் அதி கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து சேதமான நிலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் இடிபாடுகளில் […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறையில் மக்களை நேரடியாக சந்தித்தார்:

சென்னை, ஜூலை 16– “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை மு.க.ஸ்டாலின் கடந்த 3ந் தேதி அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம். தொடர்ந்து, கடந்த 10ந் தேதி அன்று திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் முதலமைச்சர், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார். மேலும், […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சிதம்பரம், ஜூலை 16– தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். சிதம்பரத்தில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை: எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார். அமித்ஷா சொல்வதை திரிக்க கூடாது. எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது. இன்னும் சில கட்சிகள் உள்ளன. அதிமுக, பாஜக, கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது. […]

Loading

செய்திகள்

பாட்னாவில் நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய இண்டிகோ விமானம்

பாட்னா, ஜூலை 16– பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது நூலிழையில் விபத்திலிருந்து தப்பியுள்ளது. நேற்றிரவு டெல்லியில் இருந்து பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் (6இ 2482) மொத்தம் 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலைய ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் ஓடுபாதை தளத்துக்கு முன்னரே விமானத்தை விமானி தரையிறக்கினார். விமானம் தரையிறங்கிய பின்னர், ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்த போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த விமானி, புத்திசாலித்தனமாக […]

Loading

செய்திகள்

சாலையில் கிடந்த ரூ. 1.46 லட்சத்தை காவலர்களிடம் ஒப்படைத்த 2 பேர் : கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை, ஜூலை 16– சாலையில் கிடந்த ரூ. 1.46 லட்சத்தை காவல் நிலையத்தை ஒப்படைத்த நண்பர்கள் 2 பேரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். கோயம்பேடு காவல் நிலைய எல்லையில் திருடிச் சென்ற காரை, வளசரவாக்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் பிடித்த காவல் குழுவினர் மற்றும் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை கோயம்பேடு பகுதியில் சுரேஷ்குமார் […]

Loading

செய்திகள்

114 வயது ‘மாரத்தான்’ வீரர் மரணத்துக்கு காரணமான கார் டிரைவர் கைது ; கனடாவில் வசிக்கும் 30 வயது இந்திய

ஜலந்தர், ஜூலை 16– ஜலந்தர் – பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 14ந் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் 114 வயதான பிரபல மாரத்தான் வீரர் ஃபெளஜா சிங் பலியானார். இவரது மரணத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த 30 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் கனடா நாட்டில் வாழும் இந்தியர். ‘‘டர்பன் குற்றவாளி’’ என அன்புடன் அழைக்கப்பட்ட ஃபெளஜா சிங் தனது சொந்த கிராமமான பியாஸ் பிண்டிற்கு அருகே சாலையைக் கடக்க முயன்றார். […]

Loading

செய்திகள்

டெல்லியில் 5 பள்ளிகள், 1 கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஜூலை 16– டெல்லியில் 5 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் டெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. டெல்லியில் இன்று துவாரகாவில் உள்ள செயிண்ட் தாமஸ் பள்ளி, வசந்த்குஞ் பகுதியில் உள்ள வசந்த் வேலி பள்ளி, ஹவுஸ் காஸில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி மற்றும் லோதி எஸ்டேட்டில் […]

Loading

செய்திகள்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள்

கும்பகோணம், ஜூலை 16– கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் 2004ஆம் ஆண்டு சூலை 16 ஆம் தேதி பெரும் தீ விபத்தை ஏற்பட்டது. மாநிலத்தையே உலுக்கிய இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். மதிய உணவு அறையில் உணவு தயாரிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தால் பெரும்பாலும் கூரையால் ஆன பள்ளி கட்டிடம் பற்றி […]

Loading

செய்திகள்

த.வெ.க. கொடியின் நிறம்: தடை கோரி வழக்கு

சென்னை, ஜூலை 16– த.வெ.க. கொடியின் நிறம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது. த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]

Loading

செய்திகள்

கொடுங்கையூரில் வாலிபர் கொலை: 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

சென்னை, ஜூலை 16– கொடுங்கையூரில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, எம்.கே.பி. நகர், புது நகர் 10வது தெருவைச் சேர்ந்த சங்கர் (20). கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, ஜிஎன்டி சாலையிலுள்ள அம்மா உணவகம் பின்புறமுள்ள காலி மைதானத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Loading