செய்திகள்

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் திருக்குளம் ஆய்வு

சென்னை, ஜூலை 29– எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பொய் தான். அதற்காக தான் உருட்டலும் திரட்டலும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு தகுந்த ஒரே தலைவர் தமிழக அரசியல் களத்தில் எடப்பாடி ஒருவர் தான் என்று அமைச்சர் காட்டமாகத் தாக்கினார். தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் வெற்றியை சந்தித்தது. இந்த வெற்றிகள் அனைத்துமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, திறம்பட செயல் தன்மை உள்ள […]

Loading

செய்திகள்

12–ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேரலாம்

சென்னை, ஜூலை 29– 12–ம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-–26) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:–- ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக்கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்

புதுடெல்லி, ஜூலை 29– ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடந்த மே மாதம் 7–ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள […]

Loading

செய்திகள்

22 நர்சுகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூலை.29- சிறப்பாக பணியாற்றிய 22 நர்சுகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, தமிழ்நாடு நர்சிங் மற்றும் மகப்பேறு கவுன்சிலின் நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. இதில், சிறப்பாக பணியாற்றிய 22 நர்சுகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். மேலும், தமிழ்நாடு நர்சிங் மற்றும் மகப்பேறு கவுன்சிலின் நூற்றாண்டு தொடக்க விழா இலச்சினை (லோகோ) மற்றும் காலண்டர் தொகுப்பை வெளியிட்டார். […]

Loading

செய்திகள்

திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி, ஜூலை 29– திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அம்பலம், மேற்கு தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 21) என்பவரை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் மனித உடலுக்கும், உயிருக்கும் கேடு […]

Loading

செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது

ராமேஸ்வரம், ஜூலை 29– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்கரையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மட்டுமின்றி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த […]

Loading

செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழா : சுயம்பு அம்மனுக்கு 3 லட்சம் பக்தர்கள் பால் அபிஷேகம்

மேல்மருவத்தூர், ஜூலை 29– மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 54 ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க குரு பீடத்தில் உள்ள பங்காரு சித்தர் திருவுருவச் சிலைக்கும், கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும் அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. மேலும் குரு பீடத்தில் உள்ள ஆன்மிககுரு பங்காரு சித்தர் பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை…….மாங்கனித் திருவிழா..!- விழா 25….. ! ராஜா செல்லமுத்து

திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாவாகக் கட்சி தந்த மாங்கனித் திருவிழாவில், ராதாகிருஷ்ணனை தேடிக் கொண்டிருந்தார்கள். ” சீக்கிரம் அந்தக் காெலைக் குற்றவாளியக் கண்டுபிடிக்கல. நமக்கு கெட்ட பெயர் வந்திரும். எப்பாடுபட்டாவது ,அந்தக் கொலைகாரப் பயல புடிச்சா தான், நமக்கு போலீஸ்ங்கிற பேரு. இல்ல வேற மாதிரி ஆயிரும் “ என்று கங்கணம் கட்டித் தேடிக் கொண்டிருந்தார்கள் காவல் துறையினர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் நடக்கும் மாங்கனித் திருவிழா ரொம்ப விசேஷமாக நடந்து கொண்டிருக்கும் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை ….. கற்றார் – பெற்றார் : விழா..! விழா 24 …….. ராஜா செல்லமுத்து

” நடக்கப் போற திருவிழாவுக்கு நீங்க அவசியம் வந்திரணும். சரியா? ” என்று அப்துல் காதரிடம் பத்திரிகையைக் கொடுத்தார், சொக்கலிங்கம். ” நீங்க சொல்லி வராம இருப்பேனா, என்ன? திருவிழாவில முதல் ஆளா நான் வந்து நிப்பேன்” என்றார், அப்துல் காதர். ” சரி… இன்னும் நிறையப் பேருக்குப் பத்திரிகை குடுக்கணும். அப்ப நான் வரட்டுமா?” என்று சொல்லிய, சொக்கலிங்கம் அப்துல்காதர் வீட்டை விட்டுக் கிளம்பினார். ” அவசியம் எங்க திருவிழாவில நீங்க பங்கெடுத்துக்கிரணும்” என்று தன் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவுகள் சில நிஜங்கள்… வத்சலா சிவசாமி

பார்த்தீபனும் பிரபுவும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்ப கல்வியில் இருந்தே இருவரும் சேர்ந்தே படித்தார்கள். அவர்கள் படித்த அந்தப் பள்ளி சரித்திரப் புகழ் வாய்ந்தது. தமிழ் மீடியத்தில்தான் இருவரும் படித்தார்கள். பள்ளி இறுதித் தேர்வுக்குப் பின் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது பல மாணவர்களோடு சேர்ந்தே ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். பி.எஸ்ஸியில் படிக்கும்போது கணினியை முதலாம் பாடமாக எடுத்திருந்தார்கள். தான் […]

Loading