செய்திகள்

தேச நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி, ஆக.1- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்த விவகாரத்தில், தேச நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தானாக முன்வந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-– ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரின் நலன்களை பாதுகாப்பதற்கு மத்திய […]

Loading

செய்திகள்

‘‘பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’’: டிரம்ப் தகவல்

வாஷிங்டன், ஜூலை 31– ‘‘பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார். ‘‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இதனைத் […]

Loading

செய்திகள்

ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதா விஜயகாந்த், ஓ.பி.எஸ்.

சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், 3 நாட்கள் டாக்டர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த்தை […]

Loading

செய்திகள்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை

உடுமலை, ஜூலை 31– புலிப்பல் வைத்திருந்ததாக உடுமலை வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர், உடுமலை வனச்சரக அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் தமிழக கேரள எல்லையில் நேற்று இரவு புலிப்பல் கடத்தி வரும்போது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி […]

Loading

செய்திகள்

திருப்பூர் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை;

திருப்பூர், ஜூலை 31– திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெய் என்பவர், துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் அங்கு 1ம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வடமாநில இளைஞர் […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

பொங்கல் விழா… ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது. ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது […]

Loading

செய்திகள்

12 கிலே கஞ்சா பறிமுதல்: வடமாநில ஆசாமி கைது

ஆவடி, ஜூலை 31– தமிழ்நாடு அரசின் “போதையில்லா தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அண்ணனூர் ரெயில் நிலையம் அருகிலுள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தேக நபரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்த போது அவரிடம் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து […]

Loading

செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் மீன்குஞ்சு இருப்பு திட்டம்: கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கி வைத்தார்

கடலூர், ஜூலை 31– மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை புவனகிரி வட்டத்திற்குட்பட்ட வத்தராயன்தெத்து கிராமத்தில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் துவக்கி வைத்து, மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு மீன் விரலிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: 2025-2026ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அறிவிப்பின்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை […]

Loading

செய்திகள்

1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையும்: தவெக தலைவர் விஜய் பேச்சு

சென்னை, ஜூலை 30– தமிழக அரசியலில் 1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார். 2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மதுரை மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்காக MY TVK (மை டிவிகே) என்னும் […]

Loading

செய்திகள்

காதல் விவகாரம்: சென்னையில் கார் ஏற்றி மாணவர் கொலை: தி.மு.க. பிரமுகர் பேரன் கைது

சென்னை, ஜூலை 30– சென்னையில் கார் ஏற்றி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. பிரமுகரின் பேரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் […]

Loading