செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் மேலும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி

சிவகங்கை, ஆக.9- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் மேலும் ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். சம்பவத்தன்று கோவிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரில் அஜித்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் […]

Loading

செய்திகள்

சென்னை முதன்முதலாக ‘‘பேடல்’’ விளையாட்டு மைதானம் ‘7பேடல்’:

இசையமைப்பாளர் அனிரூத், ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்பு சென்னை, ஆக. 8: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான எம்.எஸ். தோனி தனது புதிய பேடல் விளையாட்டு மைதானத்தை ‘7பேடல்’ சென்னையில் இன்று திறந்து வைத்தார். பேடல் என்பது ஒரு பிரபலமாகி வரும் டென்னிஸ் போன்ற விளையாட்டு ஆகும். இது டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டுகளின் அம்சங்களைக் கொண்டுள்ளது. பேடல் விளையாட்டுக்கான மைதானம் டென்னிஸ் மைதானத்தை விட சிறியது. மேலும் இது கண்ணாடியால் சூழப்பட்டிருக்கும். […]

Loading

செய்திகள்

70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும்,

சென்னை, ஆக.8- 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் `முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ எனும் புதிய திட்டத்தை சென்னையில் 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு வழங்கும் பல்வேறு சேவைகள் மக்களின் வீடுதேடி சென்றடைய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்திலான செயல்பாட்டில் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில்கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே […]

Loading

செய்திகள்

உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப்: வேலம்மாள் அணி தங்கம் வென்றது

புதுடெல்லி, ஆக.8-– சர்வதேச செஸ் சம்மேளனம் (பிஃடே) சார்பில், உலக பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடந்த 2–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து 55 நாடுகளை சேர்ந்த சிறந்த பள்ளி அணிகள் பங்கேற்றன. 8 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அணி கலந்து கொண்டது. வேலம்மாள் அணியில் கீர்த்தி ஸ்ரீரெட்டி, […]

Loading

செய்திகள்

தமிழகம் அதிக வளர்ச்சி என்பது தி.மு.க.வின் பொய், புரளி

சென்னை, ஆக.8- தமிழகம் அதிக வளர்ச்சி என்பது தி.மு.க.வின் புரளி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– போட்டோசூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் விடியா தி.மு.க. அரசு, ‘இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு’ என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல்; மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல்; மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … ஆடிப் பெருக்கு விழா..!விழா 30 … ராஜா செல்லமுத்து

” பூஜைக்கு எல்லாம் தயாரா இருக்கா ? “ என்று கேட்டுக் கொண்டே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார், காவிரி மைந்தன். ” ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க? அதான் டைம் இருக்குல்ல “ என்று மனைவி கோசலை சொன்னாலும் அதை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட்டபடியே அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருந்தார், காவிரி மைந்தன். ” உனக்கென்ன நீ சொல்லுவ? ஆடிப்பெருக்கு எவ்வளவு பெரிய விழா தெரியுமா? இந்த நாள்ல நாம சாமி கும்பிட்டா தானே, […]

Loading

செய்திகள்

திருப்பூர் கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

திருப்பூர், ஆக. 7– சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனுாத்து கிராமத்தில், மடத்துக் குளம் அண்ணா தி.மு.க., – எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன் தங்கபாண்டியன் (25), ஆகியோர் வேலை பார்த்தனர். இவர்களை பார்க்க, மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் (30) சிக்கனுாத்து வந்தார். மது அருந்திய பின், தந்தை, […]

Loading

செய்திகள்

80 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக. 7– ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று (6–ந் தேதி) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (6–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் 6–ந் தேதி அன்று அதிகாலை 14 இந்திய […]

Loading

செய்திகள்

விவசாயிகள் நலனில் இந்தியா சமரசம் செய்யாது: எந்த விலையும் கொடுக்கத் தயார்

புதுடெல்லி, ஆக. 7– மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” என இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி வதித்த அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார். மறைந்த புகழ் பெற்ற விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, டெல்லியில் 3 நாள் […]

Loading

செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஆக. 7– ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு, நீதிபதிகள் ரூ.1லட்சம் அபராதம் விதித்தனர். தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை, செய்தி ஊடகங்கள் வாயிலாக, சரியான நேரத்தில், பொது மக்களுக்கு எடுத்துரைக்கவும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்கவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோரை, அரசின் […]

Loading