செய்திகள்

அன்புமணி ராமதாசின் தலைவர் பதவி ஓராண்டு நீட்டிப்பு பா.ம.க. பொதுக்குழுவில் அதிரடி முடிவு

சென்னை, ஆக. 9– சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் பதவிகாலத்தை ஓராண்டு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவில் அதன் நிறுவனர் ராமதாசுக்கும், அவரின் மகனும் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் கோர்ட் வரை சென்றுவிட்டது. ஆக.19ம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ஒரு பக்கம் ராமதாஸ் அறிவிக்க, மறுபுறம் தாமும் இன்று (9–ந் தேதி) பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார். இதற்கு எதிராக […]

Loading

செய்திகள்

சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது விபத்து: 3 பேர் பலி

சாத்தூர், ஆக. 9– சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் வீடு ஒன்றில் சிலர் பட்டாசு தயாரித்தனர். அப்போது, வெடி மருந்துகள் திடீரென வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. அது மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Loading

செய்திகள்

சி.பி.ஐ. விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதிலளிக்கும் நிகிதா

சிவகங்கை, ஆக. 9– அஜித்குமார் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையில் நிகிதா முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் அளிப்பதால் அவர் பொய் புகார் கொடுத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமாரை, நிகிதா என்பவர் தனது நகை திருடப்பட்டதாக அளித்த புகாரில் அழைத்து சென்ற தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்ததில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

பெங்களூரு, ஆக. 9– ஆப்பரேஷன் சிந்தூர் நடந்தபோது பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் நீண்ட காலமாக செயல்பட்ட 6 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய விமானப்படை தாக்குதலில், எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற விவரத்தை இன்று விமானப்படை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … உணவுத் திருவிழா..! விழா 31 … ராஜா செல்லமுத்து

காற்றின் திசையெங்கும் நறுமணம் பரப்பும் அறுசுவை உணவுகளின் வாசம். திரும்பிய பக்கமெல்லாம் உணவுத் திருவிழாவைப் பற்றிய விளம்பரங்கள். அந்த உணவுத் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தாள்,கோமதி. அவள் வருகைக்காக உணவுத் துறை அமைச்சரும் அத்தனை முக்கியப் புள்ளிகளும் காத்துக் கிடந்தார்கள். ” கோமதி என்ன அவ்வளவு பெரிய ஆளா ? அவளுக்காக நாம ஏன் காத்துக் கிடக்கணும்? விழாவ ஆரம்பிக்கலாமே? அமைச்சர் வேற காத்திட்டு இருக்காரு “ ” இல்ல சார், இந்த உணவுத் திருவிழாவை ஏற்பாடு […]

Loading

செய்திகள்

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ஆப்பரேஷன் அகல்

ஸ்ரீநகர், ஆக. 9– ஜம்மு – காஷ்மீரின் வனப்பகுதியில், 9 நாள்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கைகளின்போது 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் 9 நாட்களாக தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் அகல் […]

Loading

செய்திகள்

டெல்லியில் கனமழை; 100 விமானங்கள் தாமதம், ரெட் அலர்ட் அறிவிப்பு

புதுடில்லி, ஆக. 9– டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டெல்லியில் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரக்‌ஷா பந்தன் பண்டிகையான இன்று அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொட்டிய மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் […]

Loading

செய்திகள்

பட்டாசு தொழிலுக்குத் தேவையான உதவிகள் செய்வோம்: எடப்பாடி உறுதி

சிவகாசி, ஆக.9- சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சக அதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்துரையாடினார். ஆலைக்கு சென்று பட்டாசு உற்பத்தியையும் பார்வையிட்டார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலையில் சிவகாசியில் உள்ள ஒரு மண்டபத்தில், அச்சக உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினருடன் எடப்பாடி கலந்துரையாடலில் ஈடுபட்டார். […]

Loading

செய்திகள்

பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலை அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி

ராமேஸ்வரம், ஆக. 9– பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலின் அபாய சங்கிலியை பயணி ஒருவர் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நில பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன்- –மண்டபம் இடையே நடுக்கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ரெயில் பாலத்தில் தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் […]

Loading

செய்திகள்

‘கம்பன் கலைக்களஞ்சியம்’ பொன் விழா சிறப்பு மலர்: ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, ஆக.9- ‘கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் அவர், `கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பெற்றுக்கொண்டார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருதை […]

Loading