செய்திகள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்

திருவாரூர், ஆக. 13– திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 3-ந்தேதி நடைபெறும் 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பார் என தமிழ்நாடு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தான […]

Loading

செய்திகள்

ஒகேனக்கல்லில் இன்று காலை 4 ஆயிரம் கனஅடி நீர்வரத்து குறைவு

தருமபுரி, ஆக. 13- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று மாலை வினாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் […]

Loading

செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யும் ‘தாயுமானவர் திட்டம்’

சென்னை, ஆக.12– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்கள் […]

Loading

செய்திகள்

2 குழந்தைகளை கொன்ற வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை

சென்னை, ஆக. 12– 2 குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு மனுவிற்கு பதிலளிக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமான

வாஷிங்டன், ஆக. 12– அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. வாஷிங்டனின் புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கியுள்ளது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் […]

Loading

செய்திகள்

மினிமம் பேலன்ஸ் தீர்மானிப்பது வங்கிகள் தான்; நாங்கள் கட்டுப்படுத்தவில்லை: ரிசர்வ் வங்கி

புதுடெல்லி, ஆக. 12– மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை” என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுப்படுத்தி உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தில் நிருபர்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:– சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) நிர்ணயிக்க வங்கிகளுக்கு சுதந்திரம் உள்ளது. மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை. அது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வரம்பிற்குள் வராது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்க விரும்பும் தொகையை […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி, ஆக. 12– நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக அதாவது வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார்.இதனை ‘வாக்குத்திருட்டு’ என ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இந்த […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தேர்த் திருவிழா ….!விழா 32 …. ராஜா செல்லமுத்து

அந்த மருத்துவமனை முழுவதும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்ல முடியாத அவல நிலையில் இருந்தனர், மக்கள். ” இப்படி நடந்திருக்கக் கூடாது. “ “நடந்திருச்சு” “என்ன செய்ய?” ” இது சாமி குத்தமா ? இல்ல மனுச குத்தமான்னு எதுவும் தெரியலையே? “ “ஏதோ தவறு நடந்து இருக்கிறதுனால தான் இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கு. இல்லன்னா இப்படி நடந்திருக்காது” என்று மருத்துவமனையில் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” ஊர் மக்கள் […]

Loading

செய்திகள்

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்: நடிகர் விஜய் அழைப்பு

சென்னை, ஆக. 12– வைகை மண்ணில் நடக்கும் மாநாடு வாகை சூடும் வரலாறு என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார். மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு, 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி […]

Loading

செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில்

திருச்சி, ஆக.12– சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல்நிலையப் போலீஸாா் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே காவல்துறை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினா் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை […]

Loading