செய்திகள்

சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்தி ‘ரேபிஸ்’ பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை : தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை, ஆக 16– நாய்களின் வெறிச்செயலால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தினைத் தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களைக் கட்டுப்படுத்தி ரேபிஸ் பாதிப்பினை தவிர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகரத்திற்குட்பட்ட நாய்களை இணையதளம் வழியாக பதிவு செய்யும் ஒரு திட்டத்தை சென்னை […]

Loading

செய்திகள்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்

சென்னை, ஆக.15– இன்று சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார். 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கினார். உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரசண்ண குமார், வட்டாட்சியர் ப. பாலகிருஸ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ. யமுனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு […]

Loading

செய்திகள்

சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் 9 புதிய அறிவிப்புகள்

சென்னை, ஆக. 15– இன்று (15–ந் தேதி) 79–வது சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.22,000 ஆகவும், தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.12,000 ஆகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. வாரிசுகளுக்கு ஓய்வூதியம் இனி ரூ.11,000 ஆகவும் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

புதின் பேச்சுக்கு முன்வர இந்தியா மீதான வரியே காரணம்: டிரம்ப் பேட்டி

வாஷிங்டன், ஆக. 15– இந்தியா மீதான வரி விதிப்பே ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதித்திருந்த டிரம்ப், ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக கூடுதலாக 25 சதவிகிதம் என மொத்தம் 50 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.3.50 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது திருமாவளவன்

பெரம்பலூர், ஆக. 15– தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:– சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது பதிவு செய்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள […]

Loading

செய்திகள்

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக. 15– சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார். தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் 2025ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார். பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை …ஒட்டகத் திருவிழா..! விழா 34 …. ராஜா செல்லமுத்து

சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது, சூறைக்காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் வெளி. மருந்துக்குக் கூட ஈரமில்லாத பாலைவனம் போன்ற பகுதி. அசையும் சிறு சிறு மலைகளாக அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தன, பாலைவனக் கப்பலான ஒட்டகங்கள். தன் நீண்ட கழுத்தை அப்படியும் இப்படியுமாய் நீட்டி நீட்டி நடந்து வந்து கொண்டிருந்த ஒட்டகங்களை ஓரமாக ஓட்டிப் போய்க் கொண்டிருந்தான், வீர். நீண்ட கால் குளம்படிகள் மண்வெளியில் பதியப் பதிய நடந்து வந்த ஒட்டங்களை “த்தே …. த்தே..” […]

Loading

செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது’: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது, எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழு​வதும் 79வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் […]

Loading

செய்திகள்

சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்

சென்னை, ஆக. 15– சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின கொடி ஏற்றுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரின் மோட்டார் சைக்கிள் புடைசூழ கோட்டைகொத்தளத்திற்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் நா. முருகானந்தம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தென்னிந்தியப் பகுதிகளின் தலைமைப் படைத்தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் வி. ஸ்ரீரீஹரி, தமிழ்நாடு மற்றும் […]

Loading

செய்திகள்

50 சேவைகளுக்காக ‘மெட்டா’ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

மின்சாரம் – குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்* மாநகராட்சி வரிகளை கட்டலாம்; மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம்: பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்து சென்னை, ஆக 15– தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த மெட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. முதல் கட்டத்தில் பயன்பாட்டு கட்டண செலுத்துதல் உட்பட 50 குடிமக்கள் சேவைகள் வழங்கப்படும்.மக்கள், புகார்கள் அளிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது […]

Loading