செய்திகள்

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

திருப்பத்தூர், ஆக. 28– சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் பலியானார்கள். அவர்களது உடல்களை திருப்பத்தூர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேஷ்குமார் (45) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி கட்டட பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து […]

Loading

செய்திகள்

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: இலங்கை மந்திரி பரபரப்பு பேட்டி

சென்னை, ஆக. 28– கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நடிகர் விஜய்க்கு இலங்கை மந்திரி பதில் கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, மத்திய அரசு கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்” என்று பேசியிருந்தார். இந்த நிலையில் இலங்கை வெளியுறவு துறை […]

Loading

செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், ஆக. 28– ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 2 பேரை சுட்டுக்கொன்றனர். பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக தகவல் வந்ததையடுத்து இந்திய ராணுவமும், ஜம்மு – காஷ்மீர் காவல்துறையும் இணைந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் நேற்று இரவு முதல் ஈடுபட்டனர்.அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் […]

Loading

செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம்: 2030-–ம் ஆண்டு வரை நீட்டிப்பு

புதுடெல்லி, ஆக.28- சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் 2030-ம் ஆண்டு வரை நீட்டிப்பு மற்றும் விரவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி (பி.எம். சுவாநிதி) திட்டத்தை மறுசீரமைத்து விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொரோனாவால் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி இதில் 3 தவணையாக […]

Loading

செய்திகள்

என்ஜினீயரிங் படிப்பில் புதிய தொழில்நுட்பப் பாடங்கள் அறிமுகம்: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை, ஆக.28- மாணவர்கள் ஏ.ஐ., எந்திரக் கற்றல், தரவு அறிவியலில் சிறந்து விளங்க இளநிலை என்ஜினீயரிங் படிப்பில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப் பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் என்ஜினீயரிங் மாணவர்கள் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்ப தாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- […]

Loading

செய்திகள்

பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

பாட்னா, ஆக.27– பீகாரில் இன்று நடந்த வாக்குரிமை பேரணியில் ராகுல்காந்தியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை, சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் […]

Loading

செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் போரின்போது மோடியுடன் பேசினேன்: வர்த்தகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்

புதுடெல்லி, ஆக. 27– இந்தியா–பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்துள்ளார். மீண்டும் போர் ஏற்பட்டாலும் நானே தடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்த வரிவிதிப்பானது, இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஆக. 27–  சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 8–ந்தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.75,760-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 9–ந்தேதியிலிருந்து சற்று குறைந்து வந்த நிலையில், பின்னர் விலை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … ஆற்காடு சாலை 4 ..!. ….. ராஜா செல்லமுத்து

” எங்கே கிருஷ்ணனைக் காணோம் ? என்று நண்பர்கள் கேட்க, ” கிருஷ்ணனா ? இந்நேரம் அவர் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு இருப்பாரு “ என்றார் , கிருஷ்ணனின் நண்பர்களில் ஒருவரான மூர்த்தி. ” ஆற்காடு சாலையா ? அங்க எதுக்குப் போறாரு ?” ” எந்த வேலையா இருந்தாலும் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு வந்த பிறகு தான் மத்த வேலைகளைப் பார்ப்பாரு. இது எந்த ஒரு நாளும் தவறுனதே இல்ல” ” அப்படியா? ரொம்ப ஆச்சர்யமா […]

Loading

செய்திகள்

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், 10 பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு

பெரம்பலூர், ஆக. 27– மதுரை மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது. தவெக மாநாடு நடைபெறும் திடலில் அன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கொளுத்தும் வெயில் சவாலாக இருந்தபோதும் லட்சக்கணக்கான […]

Loading