செய்திகள்

அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

புதுடெல்லி, செப். 4– அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது குறித்தும், தமிழக பா.ஜ.க.வினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னர், அண்ணா தி.மு.க. குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, செப். 4– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அண்ணா தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]

Loading

செய்திகள்

அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்:- மீறினால் ரூ.3000 வரை அபராதம்

சென்னை, செப். 4– சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.3000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த […]

Loading

செய்திகள்

ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம்: 2 அடுக்குகளில் மட்டுமே வரி

புதுடெல்லி, செப்.4-– டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … தங்கச் சாலை 8 …! …. ராஜா செல்லமுத்து

வாடிக்கையாளர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், பலசரக்குக் கடைக்காரர். ” சார், எல்லாம் நல்ல காசு தான். என்னமோ இந்தப் பத்து ரூபா நாணயத்த நாங்களே அச்சு வார்த்துக் கொடுத்த மாதிரியே இப்பிடி உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கீங்க? எல்லாம் உங்களை மாதிரிக் கடைக்காரங்க எங்களுக்கு கொடுக்கிற காசு தான் சார் . நம்பி வாங்கிப் போடுங்க. எதுவும் வராது” என்று கடைக்காரரிடம் தன் நாணயத்தைப் பற்றி நாணயமாகப் பேசினான், நாராயணன் […]

Loading

செய்திகள்

மதுரை வடக்கு தொகுதியில் கூட்டமேடைக்கு 2 கி.மீ. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார்

மதுரை, செப்.3– ’’மதுரை ஊழல் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம், மக்கள் எதிர்ப்பை திசை திருப்பவே இந்த நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளில் மக்களை சந்தித்து எழுச்சியுரையாற்றிய அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக மதுரை, கே.புதூர் அழகர் கோவில் பிரதான சாலையில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:– “மதுரை வடக்கு தொகுதி அண்ணா தி.மு.க.வின் கோட்டை. 2 கிமீ […]

Loading

செய்திகள்

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு:

திருச்சி, செப். 3– திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் அந்த விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டதால் 150-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவுக்கு புதன்கிழமை காலை 4.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. விமானம் ஓடுபாதைக்குக் கொண்டுவரப்பட்டபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக இயந்திரக் கோளாறை சரி […]

Loading

செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் விலை: ரூ. 79 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை, செப். 3– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் இன்று பவுன் ரூ.78,440-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 29-ஆம் […]

Loading

செய்திகள்

அன்புமணி மீது நடவடிக்கை: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் ஆலோசனை

விழுப்புரம், செப். 3– ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை ராமதாஸ் நாளை (வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் […]

Loading

செய்திகள்

8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை, செப். 3– இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக, 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் […]

Loading