செய்திகள்

சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது

பெங்களூரு, செப். 10– சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி தொடர்பான பண மோசடி வழக்கில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ண செயிலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதீஷ் செயில், 1.25 லட்சம் டன் இரும்புத்தாதுவை 2010 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஏற்றுமதி […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … பின்னி சாலை 14 …! … ராஜா செல்லமுத்து

இரவு வானம் விடிவதற்குள் ஒவ்வொரு அறையாகத் தட்டிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். திரைப்படத் தயாரிப்பு மேலாளர். நேரமாச்சு. எல்லாரும் எந்திரிங்க. சூட்டிங் போகணும். எல்லாரும் எந்திரிங்க. டீ, காபி வரும் குடிச்சுருங்க. அஞ்சு மணிக்கு எல்லாம் கார் வந்துரும். சீக்கிரமா போனாத்தான், படப்பிடிப்புத் தளத்துக்குப் போக முடியும். எல்லாரும் எந்திரிங்க” என்று அறைகளில் தங்கியிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். “ஐயா இன்னைக்கு எங்க சூட்டிங்? இவ்வளவு சீக்கிரமா கிளப்பி விடுறீங்களே?” என்று நடிகையின் உதவியாளர் […]

Loading

செய்திகள்

நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’: இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் குறித்து பேச விரும்பும் டிரம்புக்கு மோடி பதில்

புதுடெல்லி, செப். 10– இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், பிரதமர் மோடியும் வெளியிட்டுள்ள கருத்து வரவேற்பைப் பெற்றிருக்கும். அதே நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘வர்த்தகத் தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் ‘‘ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என இசைவு தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக […]

Loading

செய்திகள்

சென்னையில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 22.3 கோடி மோசடி:

சென்னை, செப். 10– ஆன்லைன் டிரேடிங் தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, ரூ.22.3 கோடி பணத்தை மோசடி செய்த வடமாநில ஆசாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, இராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஸ்வேதரன்யன் (76) என்பவர் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் டிரேடிங் தளத்தில் முதலீடு செய்தபோது, போலியான ஆன்லைன் டிரேடிங் தளம் மூலம் மொத்தம் ரூ.22.30 கோடி மோசடி […]

Loading

செய்திகள்

விஜய் பிரச்சாரம்: காவலர்கள் விதித்த நிபந்தனைகள்

சென்னை, செப். 10– நடிகரும், தவெக தலைவருமான விஜய், 13–ந் தேதி முதல் தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கும் நிலையில், திருச்சியில் தவெக பிரசாரத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 13–ந் தேதி சனிக்கிழமையன்று திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் என 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்கிறார். இதற்கான திட்ட விவரங்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி […]

Loading

செய்திகள்

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை, செப். 10– சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. அதேபோன்று மேற்கு மாம்பலம் மற்றும் அடையாறு பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்ட […]

Loading

செய்திகள்

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய வழக்கு:

சென்னை, செப். 10– நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6–ந் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் […]

Loading

செய்திகள்

அரசு பஸ் – மோட்டார் சைக்கிள் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி

திண்டுக்கல், செப். 10– திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன்கிழவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இவரது உறவினர் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22). இவர்கள் இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பாலசுப்பிரமணியும் புவனேஸ்வரியும் இன்று காலை வடமதுரை அருகே […]

Loading

செய்திகள்

புதிய டிஜிட்டல் கடன் வசதி : சவுத் இந்தியன் வங்கி அறிமுகம்

கொச்சி, செப் 10– சவுத் இந்தியன் வங்கி பரஸ்பர முதலீடுகளுக்கு எதிரான புதிய டிஜிட்டல் கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் பரஸ்பர முதலீடுகளுக்கு எதிராக கடன்களைப் பெற உதவுகிறது. கடன் விண்ணப்ப செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மற்றும் காகிதமற்றது, குறைந்தபட்ச நடைமுறைகளுடன் கடன் வழங்குவதை உறுதி செய்கிறது. இந்த புதுமையான சேவை, டிஜிட்டல் தளமான DhanLAP ஐ இயக்கும் M/s ஆர்க் நியோ நிதி சேவைகளுடன் கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “இந்த முயற்சி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் நபராக மோடி வாக்களித்தார்

புதுடெல்லி, செப்.9- நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது, முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் […]

Loading