செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, செப். 23– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ள அவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் […]

Loading

செய்திகள்

செங்கோட்டையன் தொகுதியில் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு, செப்.23– செங்கோட்டையன் தொகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்று தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது […]

Loading

செய்திகள்

ஆதிதிராவிடர் – பழங்குடி இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சிப் பட்டறை : உதயநிதி துவக்கி வைத்தார்

சென்னை, செப் 23– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகளையும், பழங்கால பாரம்பரிமிக்க இசைக்கருவிகளையும் பார்வையிட்டு, இசைக்கலைஞர்கள் அந்த இசைக்கருவிகளைக் கொண்டு பல்வேறு விதங்களில் […]

Loading

செய்திகள்

புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே எச்–1பி விசா கட்டண உயர்வு பொருந்தும்

வாஷிங்டன், செப்.21– எச்–1பி விசாவுக்கான கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய கட்டணம் என்று அமெரிக்கா விவரித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த எச்–1 பி விசா கட்டண உயர்வு (ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சம்) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பற்றி பல்வேறு சந்தேகங்கள், முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த விசாவை வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த கட்டண உயர்வு என்பது புதிய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே […]

Loading

செய்திகள்

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: செய்தியாளர்கள் 31 பேர் பலி

சனா, செப். 21– ஏமனில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் செய்தியாளர்கள் 31 பேர் உயிரிழந்தனர். மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023ம் ஆண்டு முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக, ஏமனில் அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் […]

Loading

செய்திகள்

நாகையில் பொது சொத்துக்கு சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

நாகை, செப். 21– நாகையில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவரில் தவெக தொண்டர்கள் ஏறினர். தொண்டர்கள் ஏறியதில் பாரம் தாங்காமல் சுவர் இடிந்து கீழே விழுந்தது. மேலும் சுவற்றிற்கு முன்னால் இருந்த இரும்புத் தடுப்புகளும் விழுந்தன. இந்த நிலையில், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகக் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை; 21 வயது வாலிபர் கைது

வாஷிங்டன், செப். 21– அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் குஜராத்தி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 21 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் தென் கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரண் படேல் என்ற குஜராத்தி பெண் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி கிரண் படேல் பெட்ரோல் பங்கில் பணத்தை எண்ணி கொண்டிருந்போது அங்கு வந்த ஒரு நபர் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். பின்னர் கிரண் படேலை சுட்டுவிட்டு அந்த நபர் […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் அருகே மின்சாரத்தை துண்டித்து ‘டிரான்ஸ் பார்மரை’ திருடிய கும்பல்

திருவள்ளூர், செப். 21– திருவள்ளூர் அருகே மின்சாரத்தை துண்டித்து ‘டிரான்ஸ் பார்மரை’ திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த குன்னவளம் கிராமத்தில் உள்ள வயல்வெளி அருகே மின்கம்பத்தில் டிரான்ஸ் பார்மர் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் மின் இணைப்பு துண்டித்து மின்கம்பத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரை தனியாக கழற்றி திருடி சென்றனர். சிறிது தூரத்தில் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியை வீசிவிட்டு அதில் இருந்த செம்புகம்பிகள் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர். இன்று […]

Loading

செய்திகள்

நாகப்பட்டினம், திருவாரூரில் பிரச்சாரம்: விஜய் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்: தமிழக அரசு விளக்கம்

சென்னை, செப்.21–- த.வெ.க. தலைவர் விஜய், நாகப்பட்டினம், திருவாரூர் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், தவறான தகவல்களை பரப்பி உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-– நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தகவல்கள் தவறானவை. அவர், மண் அரிப்பை தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் ரூ. 82 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, செப். 20- உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 16ந்தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி […]

Loading