சேலம், நவ. 22: சேலத்தில் நிலத்தகராறில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45) விவசாயி. கிரான் காடு திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இவர்களது சண்டையை அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர். நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு […]
![]()



