செய்திகள்

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

தி.மு.கவினர் தர்ணா போராட்டம்; பரபரப்பு திண்டுக்கல், ஆக. 16– திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழநி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக இன்று காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு 3 வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? விஜய் கண்டனம்

சென்னை, ஆக. 14– தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த தி.மு.க. அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி, ஆக. 12– நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக அதாவது வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார்.இதனை ‘வாக்குத்திருட்டு’ என ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இந்த […]

Loading

செய்திகள்

பள்ளி கிணற்றில் மாணவன் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர், ஆக. 4– தனியார் பள்ளி கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் இறந்த கிடந்த சம்பவத்தில் அவனது உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவர்களுக்கு முகிலன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 20-ந்தேதி மறியல் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை, ஆக. 1– 20-ந்தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சங்க தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:- சத்துணவு துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வருடங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனாலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்போது 7 கட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக […]

Loading

செய்திகள்

திருப்பூர் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை;

திருப்பூர், ஜூலை 31– திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெய் என்பவர், துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் அங்கு 1ம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வடமாநில இளைஞர் […]

Loading