சென்னை, டிச. 12: சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் ‘கிரிடர்’ ஆப் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் […]
![]()


