புதுடெல்லி, ஆக. 20– டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்க வந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பா.ஜ.க. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். […]
![]()


