டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு தூத்துக்குடி, ஜூலை.6- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடைபெறவிருக்கும் குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு […]
![]()


