செய்திகள்

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, டிச. 15: ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முதலில் பிரதமர் மோடி ஜோர்டான் நாட்டிற்கு செல்கிறார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து, இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். பின்னர் அவர் டிசம்பர் 16ம் தேதி எத்தியோப்பியாவிற்கு […]

Loading

செய்திகள்

மகாகவி பாரதியின் 143வது பிறந்தநாள்: தமிழில் பிரதமர் மோடி பதிவு

புதுடெல்லி, டிச. 11– மகாகவி பாரதியின் 143வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

புதுடெல்லி, டிச. 5: டெல்லியில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் நடத்திய பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, அணுசக்தி தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, டிச. 4: டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீட்டித்து வருகின்றது. நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 3.1 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1.6 டிகிரி குறைந்து 23.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் […]

Loading

செய்திகள் முழு தகவல்

ராமதாஸ் – அன்புமணி சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச. 3: பா.ம.க. விவகாரத்தில் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமதாஸ் – அன்புமணி சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பா.ம.க.வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டதால், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என இராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் […]

Loading

செய்திகள்

உள்நாட்டில் தயாராகும் 5ம் தலைமுறை போர் விமானம்

புதுடெல்லி, நவ. 24: உள்நாட்டிலேயே 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக டிஆர்டிஓ வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்புத்துறையில் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மேம்பட்ட நடுத்தர ஏவுகணை மற்றும் பிரளய ஏவுகணைக்காக உருவாக்கப்பட்ட முக்கிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்தியத் தொழிற்சாலைகளுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் […]

Loading

செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்; உமரின் ரகசிய டைரிகள் சிக்கின

புதுடெல்லி, நவ. 13– டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில், கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உமர் எழுதியதாகக் கருதப்படும் டைரி மற்றும் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அல பலாஹ் பல்கலைக்கழக டாக்டர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வளாகத்துக்குள் இருந்த அறையிலிருந்து சில நோட்டு புத்தகங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியிருப்பதாக தெரிகிறது. டாக்டர் முசாமில் தங்கியிருந்த அறை எண் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 1-ந் தேதி கூடுகிறது

புதுடெல்லி, நவ.9- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரமாகி வருகிறது. இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரும், இடையில் மழைக்கால கூட்டத்தொடரும், இறுதியில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும். பொதுவாக கூட்டத்தொடர் குறைந்தது 25 நாட்களுக்கு மேல் நடைபெறுவது வழக்கம். கடந்த குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ந்தேதி முதல் […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்

புதுடெல்லி, அக்.12- பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

புதுடெல்லி, செப். 4– அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது குறித்தும், தமிழக பா.ஜ.க.வினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னர், அண்ணா தி.மு.க. குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என […]

Loading