செய்திகள்

டெல்லியில் 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி

புதுடெல்லி, ஜன. 26– இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். இவ்விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார். டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக ஜனாதிபதி மாளிகையில் இருந்து திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் வீரர்கள் […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்

புதுடெல்லி, ஜன. 20: பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக நிதின் நபின் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பா.ஜ.க.வின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார். பா.ஜ.க.வில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பீகார் மாநில மந்திரியாக இருந்த நிதின் நபின் (வயது 45), கட்சியின் செயல் தலைவராக […]

Loading

செய்திகள்

மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, ஜன. 19: உயிர்களை பாதுகாக்கவும், நிவாரணம் வழங்கவும் தேசிய பேரிடர் மீட்புப்படை அயராது பாடுபடுகிறது, சர்வதேச அளவில் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை என்பது இந்தியாவில் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் ஒரு சிறப்புப் படையாகும், இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த படையின் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் […]

Loading

செய்திகள்

டெல்லியில் மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி, ஜன. 11: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.18,500 கோடியை உடனே ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த நிதி மந்திரிகள் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. பா.ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு பட்ஜெட் தேதியை மாற்றி அமைத்ததன்படி அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி, ஜன. 6: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 79). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சோனியா காந்திக்கு இருமல் பிரச்சினை உள்ளது என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினை காரணமாக அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நுரையீரல் […]

Loading

செய்திகள்

டெல்லியில் அடர் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து

புதுடெல்லி, டிச. 30: டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இன்று பிற்பகல் வரை அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் காரணமாக, டெல்லி சர்வதேச […]

Loading

செய்திகள்

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி, டிச. 26– வளர்ந்து வரும் இளம் இந்திய கிரிக்கெட் வீரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். வீரம், கலை, கலாச்சாரம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது (ராஷ்ட்ரிய பால புரஸ்கார்) விருது ஆண்டுதோறும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான விருதுக்கு 20 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்களுக்கான […]

Loading

செய்திகள்

ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்

புதுடெல்லி, டிச.26- புதிய வருமானவரி சட்டம், ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. அதன்படி, ரூ.12 லட்சம்வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. தற்போதைய வருமானவரி சட்டம், கடந்த 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் வார்த்தைகளை எளிமைப்படுத்து வதற்காகவும் இந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று விட்டது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் கடும் பனிமூட்டம் 4 பேர் பலி

புதுடெல்லி, டிச. 16: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஆக்ரா விரைவுச் சாலையில் 8 பஸ்கள் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் கடும் பனிப்பொழிவு: விமான சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி, டிச. 15: டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களின் நிலை அறிந்து விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். […]

Loading