செய்திகள்

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.55 லட்சத்தில் புதிய அன்னதானக் கூடம்: அமைச்சர் சேகர்பாபு திறந்தார்

சென்னை, ஜன. 22– சென்னை மண்ணடியில் அமைந்துள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.54.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள்முதல் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 147 புதிய அன்னதானக் கூடங்கள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 35 அன்னதானக் கூடங்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையர் ஜ.முல்லை, மாநகராட்சி […]

Loading