சென்னை. ஜூலை.22- சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவத்சவா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டில் 54-வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் சென்னை ஐகோர்ட்டின் 36-வது தலைமை நீதிபதியாகவும் இவர் […]
![]()


