செய்திகள்

அரசியலை விட்டு வெளியேற மாட்டேன் பிரசாந்த் கிஷோர் பேட்டி

பாட்னா, நவ. 18– பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி […]

Loading

செய்திகள்

தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மண்ணைக் கவ்வினார்

பாட்னா, நவ. 14– பிரபல தேர்தல் ஆலோசகர் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு பீகார் சட்டசபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பீகாரில் பா.ஜ.க. – காங்கிரஸ் கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் புது போட்டியாளராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் களத்தில் இறங்கியது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று […]

Loading

செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு

புதுடெல்லி, நவ.12-– பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதியும், நேற்றும் இருகட்டங் களாக நடந்து முடிந்தது. வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் கருத்து கேட்டு, பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகள் நடத்தின. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. ஏறத்தாழ அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 243 […]

Loading

செய்திகள்

பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு: பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது

பாட்னா, நவ.5- பீகாரில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதன்படி 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் […]

Loading