செய்திகள் முழு தகவல்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.22: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோயம்புத்தூருக்கும், கோயில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரெயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தங்களது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

10வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பாட்னா, நவ. 20: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீகார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவி ஏற்றார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய […]

Loading

செய்திகள்

கோவை வந்த பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கோவை, நவ.20- கோவை வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த கோரி மனு வழங்கினார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியாவில் இயற்கை வேளாண் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்

புட்டபர்த்தி, நவ. 19: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் அவர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார். சாய்பாபாவின் நினைவு நாணயத்தையும், தபால் தலையையும் அவர் வெளியிட்டார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி சத்யசாய் பாபா பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். புட்டபர்த்தியில் […]

Loading

செய்திகள்

சவூதி அரேபியாவில் பஸ் விபத்து: 42 இந்தியர்கள் பலி

மெக்கா, நவ. 17– டீசல் டேங்கர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 பேர் பலியாகி உள்ளனர்.நெஞ்சை உலுக்கும் இந்த விபத்து சவூதி அரேபியாவில் நடந்துள்ளது. இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 (இந்திய நேரப்படி) மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி […]

Loading

செய்திகள்

பிர்சா முண்டா பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, நவ. 15– பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார். 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார். இதனால், ‘நிலத்தின் தந்தை’ எனப் பழங்குடினரால் அவர் அழைக்கப்பட்டார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது ; பிரதமர் மோடி உறுதி

திம்பு, நவ. 11– டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை பூடான் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு திம்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். திம்புவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:– டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. […]

Loading

செய்திகள்

அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, நவ. 8– இன்று பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் 98-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘எல்.கே.அத்வானிஜி–க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உயர்ந்த தொலைநோக்குப் பார்வையும் அறிவுத்திறனும் கொண்ட ஒரு அரசியல்வாதியான அத்வானிஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார். […]

Loading

செய்திகள்

எர்ணாகுளம் – பெங்களூரு உள்பட ‘வந்தே பாரத்’ 4 புதிய ரெயில் சேவை மோடி துவக்கி வைத்தார்

* ரெயிலில் பயணித்தார்: பயணிகளோடு கலந்துரையாடினார் * குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ந்தார் வாரணாசி, நவ.8– ‘‘எர்ணாகுளம் – பெங்களூரு உள்பட ‘வந்தே பாரத்’ 4 புதிய ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, ‘‘இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது’’ என தெரிவித்தார். நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் மூலம் பயண நேரம் கணிசமாக குறைகிறது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மக்களிடையே […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார்: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

புதுடெல்லி, செப். 30– பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார். அவருக்கு வயது 94. அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜய்குமார் மல்ஹோத்ரா சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். டெல்லியில் உள்ள ராக்பஞ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மல்ஹோத்ரா உடலுக்கு […]

Loading