செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் : செங்கோட்டையன் தகவல்

ஈரோடு, டிச.12: டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசுகிறார். ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார பொதுக்கூட்டம் 18-ந் தேதி விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தவெக தலைவர் விஜய் வருகிற 18-ம் தேதி ஈரோடு […]

Loading

செய்திகள்

கோபிசெட்டி பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி 30–ந் தேதி -பிரச்சாரம்

சென்னை, நவ.24: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் 30–ந் தேதி – ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். சட்டமன்றத் தொகுதி வாரியாக, கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் […]

Loading

செய்திகள்

மாநகர் போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘பஸ் பர்ஸ்ட்’ பிரச்சாரம்: உதயநிதி துவக்கி வைத்தார்

சென்னை, நவ.22: சென்னை அண்ணா சதுக்கம் பஸ் முனையத்தில், மாநகர் போக்குவரத்து கழகப் பஸ்களுக்கு முன்னுரிமைக்கான ‘பஸ் பர்ஸ்ட்’ என்ற பிரச்சாரத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் பொதுப்பஸ்களை முன்னிலைப்படுத்தி, பொது மக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மாநகர் போக்குவரத்து கழகப் பஸ்களுக்கான முன்னுரிமை ‘பஸ் பர்ஸ்ட்’ பிரச்சாரத்தில் சிறப்பு அம்சங்களான குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைதல், தடைகள் மற்றும் நெரிசல் அற்ற பஸ் பயணம், குறைந்த உமிழ்வு போன்ற […]

Loading

செய்திகள்

கரூர் த.வெ.க. கூட்டத்தில் பெரும் சோகம்: நெரிசலில் சிக்கி 39 பேர் பலி; பலர் படுகாயம்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு விவரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த தகவலின்படி, […]

Loading

செய்திகள்

நாமக்கல்லில் விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

நாமக்கல், செப். 27– நாமக்கல்லில் இன்று 3–ம் கட்ட பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் துவக்கினார். பிரச்சாரத்திற்கு வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் த.வெ.க. தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தார்கள். கட்சி கொடிகளை அசைத்து வாழ்த்து கோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்தார்கள். தொண்டர்கள் கூட்டத்தால், அவரது பிரச்சார வாகனம் மெல்ல ஆமை வேகத்தில் நகர்ந்து வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிரச்சார இடத்திற்கு வர முடியவில்லை. பல மணி நேரம் தாமதமாகவே வந்தார். “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் […]

Loading