தருச்சி, ஆக.25 – ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணச்சநல்லூர் தொகுதியில் துறையூர் பிரதான சாலையில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார். “மணச்சநல்லூர் என்றாலே பொன்னி அரிசிதான் ஞாபகம் வரும். இங்கு விளையும் அரிசி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த தொகுதியில் பேசுவது மகிழ்ச்சி. நானும் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்தவன். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிறைய திட்டங்கள் கொடுத்தோம். […]
![]()


