மேல்மருவத்தூர், ஜூலை 29– மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 54 ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க குரு பீடத்தில் உள்ள பங்காரு சித்தர் திருவுருவச் சிலைக்கும், கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும் அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. மேலும் குரு பீடத்தில் உள்ள ஆன்மிககுரு பங்காரு சித்தர் பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. […]
![]()


