சென்னை, ஜன. 21: சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் தமிழ்நாடு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் ஆளுமைக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 5 புலிகள் காப்பகங்களான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் ஆகியவையின் ஆளுமைக்குழுவின் கூட்டம் இது. இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள் […]
![]()



