செய்திகள்

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு: ட்ரோன் கேமராக்கள் பறக்கத் தடை சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜன. 21– பிரதமர் நரேந்திர மோடி 23–ந் தேதி தமிழகம் வரவுள்ளதையொட்டி சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் வரும் 23-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதில் பிரதமர் நரேந்​திரமோடி உரை​யாற்​றவுள்​ளார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​கள் பங்​கேற்​க​வுள்​ளனர். இதற்​காக பிரதமர் திரு​வனந்​த​புரத்​தில் இருந்து வரும் 23-ம் தேதி பகல் […]

Loading

செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு: சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார்

தாம்பரம், ஜன.13- தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாபெரும் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார். ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் – தொழில்நுட்ப மன்றம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவர்கள் பங்கேற்று, 800-க்கும் மேற்பட்ட வியக்கத்தக்க தங்கள் […]

Loading

செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சென்னையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, டிச. 24– கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பிற்க்காகவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், இன்று இரவு முதல் நாளை வரை, சென்னை பெருநகர […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை பாதுகாப்பு பணிகள் தீவிரம்

வேலூர், டிச. 16: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சேலம், நவ. 22: சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. […]

Loading

செய்திகள்

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை, நவ.19- ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், கோர்ட் அருகே இரு ரவுடிக்கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதாகவும், சென்டிரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க ஆட்சியில் […]

Loading

செய்திகள்

ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திண்டிவனம், அக். 19– ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேலும் டாக்டர் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாசிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் […]

Loading

செய்திகள்

கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்

இம்பால், செப். 12– கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்ல இருக்கிறார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, […]

Loading

செய்திகள்

புதுடெல்லியில் இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஆக. 20– தலைநகர் புதுடெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபர், 25,000 அமெரிக்க […]

Loading

செய்திகள்

சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு:

சென்னை, ஆக. 13– சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15–ந் தேதி 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித […]

Loading