கட்டபொம்மன் – 6 பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து சென்ற பானர்மேன், கயத்தாறில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதும்போது, கட்டபொம்மனை தூக்கிலிடும் அந்த கடைசி நிமிடம் ‘அன்று மலர்ந்த செந்தாமரை மலர் போல் கட்டபொம்மனின் முகம் இருந்ததாக’ வர்ணிக்கிறார். மரண பயமோ, வாட்டமோ எதுவுமே அவர் முகத்தில் தெரியவில்லை. கைகளில் கால்களில் விலங்குகள் பூட்டியிருந்தாலும், காலை நன்றாக பூமியில் பதித்து நடந்து வந்தார். அப்படி வரும்போது இருபுறமும் பாளையக்காரர்களை கம்பீரமாக பார்த்தபடியே நடந்து வந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்கு உதவி […]
![]()


