செய்திகள்

ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல்-–கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் மாநில வள மையம்: அன்பில் மகேஷ் திறந்தார்

சென்னை, ஜன.22- சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியுதவியுடன் மாநில வள மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். அப்போது பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் உடன் இருந்தார். புதிதாக திறக்கப்பட்ட இந்த வள மையத்தில், வளர்ந்துவரும் கல்வி தொழில்நுட்பவியலின் நவீன யுக்திகளை பயன்படுத்தி கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் […]

Loading

செய்திகள்

சென்னை பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்

சென்னை, ஜன. 20– இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிச்சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 11–ம் வகுப்பு பயிலும் 604 மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து, அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கான சிற்றுண்டி பயிர் வகையினை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:– சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் […]

Loading

செய்திகள்

இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை, நவ.15- இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை வாசித்தார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பாவேந்தர் பாரதிதாசனார் அறிவுறுத்தியபடி, இனிமையான […]

Loading

செய்திகள்

மதுரை ஹோலிபேமிலி பள்ளியில் மாநகர போக்குவரத்து காவல் சார்பாக மாணவர்களுக்கு

மதுரை, ஆக.12– தமிழகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலிபேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளை பற்றிய விழிப்புணர்வினை திலகர்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி வழங்கினார். இதில் […]

Loading

செய்திகள்

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ புதிய முடிவு

புதுடெல்லி, ஆக. 11– 2026–27ம் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சி.பி.எஸ்.இ. அறிமுகம் செய்கிறது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் […]

Loading