விழுப்புரம், நவ. 20: திண்டிவனம் கிடங்கல் பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திண்டிவனம் கிடங்கல் பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை உள்ளிட்ட சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இதுபற்றி அவர் கூறியதாவது:- திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள பாரதிதாசன்பேட்டையில் சிறிய அளவிலான வனதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவராக கொற்றவை வீற்றிருக்கிறார். சுமார் 6 அடி உயரத்தில் […]
![]()


