சென்னை, டிச. 11: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-–II போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது. 2,764 தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 3,16,916 மாணவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பயன் அடைந்துள்ளனர். […]
![]()


