சென்னை, ஜன.23- சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 1,323 மாணவ–மாணவியருக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோவின் புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், பிரம்மோஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான பேராசிரியர் ஏ.சிவதாணுபிள்ளை பங்கேற்றார். நிகழ்ச்சியில் சிவதாணுபிள்ளை பேசியதாவது:- விஞ்ஞானிகள், தலைவர்கள், என்ஜினீயர்கள், கலைஞர்களை உருவாக்குவதில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் பட்டப்படிப்பை […]
![]()



