செய்திகள் நாடும் நடப்பும்

10வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பாட்னா, நவ. 20: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீகார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவி ஏற்றார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய […]

Loading

செய்திகள்

20–ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்

பாட்னா, நவ. 17– பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கவர்னர் ஆரிப் முகமது கானிடம் வழங்கினார். 20–ந்தேதி மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் 17-வது சட்டசபையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை […]

Loading

செய்திகள்

பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல்: 121 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

பாட்னா, நவ.6– பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பகல் 1 மணி நிலவரப்படி 42.3% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி […]

Loading

செய்திகள்

பீகாரில் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா, ஜூலை 17– பீகாரில் குடியிருப்புகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று அறிவித்துள்ளார். இது வரவிருக்கும் தேர்தலுக்கு மக்களை மயக்கும் செயல் என எதிர்கட்சியினர் குறை கூறியுள்ளனர். பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ஆரம்பத்தில் இருந்தே பீகாரில் அனைவருக்கும் மலிவு […]

Loading