செய்திகள்

நாகப்பட்டினம், திருவாரூரில் பிரச்சாரம்: விஜய் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்: தமிழக அரசு விளக்கம்

சென்னை, செப்.21–- த.வெ.க. தலைவர் விஜய், நாகப்பட்டினம், திருவாரூர் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், தவறான தகவல்களை பரப்பி உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-– நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தகவல்கள் தவறானவை. அவர், மண் அரிப்பை தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் […]

Loading

செய்திகள்

மீனவர்கள் பிரச்சினையில் ஸ்டாலின் கபட நாடகம்: விஜய் கடும் தாக்கு

நாகப்பட்டினம், செப். 20- த.வெ.சு. தலைவர் விஜய் 2ம் கட்டமாக இன்று நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்தார். திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனவர்கள் பிரச்சினையில் ஸ்டாலின் கபட நாடகம் ஆகிறார் என்று விஜய் கூறினார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அப்போது […]

Loading

செய்திகள்

நாளை நாகையில் விஜய் பிரச்சாரம்: கட்டுப்பாடுகளை விதித்த போலீசார்

* பொதுமக்கள்–போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது * பொதுச் சொத்துக்கு தொண்டர்களால் சேதம் ஏற்படக்கூடாது நாகை, செப். 19– நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே நாளை (20ந் தேதி) பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளனர். அடுத்தாண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்சித் தலைவர்கள் பல்வேறு கட்டங்களாக சுற்றுப் பயணங்கள் […]

Loading

செய்திகள்

நாகை மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீன்படி வலைகள், ஜிபிஎஸ் கருவியை பறித்தனர்

திருக்குவளை, செப். 12– வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.மேலும், மீனவர்களிடம் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றுள்ளனர். காயமடைந்த 7 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து 50 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடந்த 11ம் தேதி மீன்பிடிக்கச் […]

Loading