செய்திகள்

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த காமராஜர் பேத்தி மயூரி கண்ணன்

சென்னை, ஜன.6- காமராஜர் பேத்தி உள்ளிட்ட பலர், விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர். த.வெ.க.வில் பல்வேறு கட்சியினர் இணைந்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர். இதற்காக, த.வெ.க. தலைவர் விஜய் பகல் 1 மணியளவில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவரை கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, த.வெ.க.வில் இணைந்த பிரபலங்களுடன் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். த.வெ.க.வில் இணைந்தவர்கள் விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மத்திய […]

Loading

செய்திகள்

மாவட்ட செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை, ஜன. 5– மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் 9–ந்தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் […]

Loading

செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஒரு தீயசக்தி, த.வெ.க. ஒரு தூயசக்தி என்று விஜய் ஆவேசம்

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்துக்கு 84 கட்டுப்பாடுகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

ஈரோடு, டிச.10: ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை இல்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரச்சார கூட்டம் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் […]

Loading

செய்திகள்

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார் கே.ஏ. செங்கோட்டையன்

சென்னை, நவ. 27– அண்ணா தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், 1977 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்ற போது, முதல்முறையாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் செங்கோட்டையன். எம்ஜிஆரின் விசுவாசியாகவும், தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அறியப்பட்ட செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து மட்டும் […]

Loading

செய்திகள் முழு தகவல்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்: நாளை த.வெ.க.வில் இணைகிறார்

சென்னை, நவ. 26: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, […]

Loading

செய்திகள்

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.14- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் […]

Loading

செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க மனு

சென்னை, நவ. 11– 2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு […]

Loading

செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்

* கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு இரங்கல் * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவருக்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு * விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் சென்னை, நவ. 5– கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து […]

Loading

செய்திகள்

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை, அக். 1– கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு 5 […]

Loading