செய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு மார்ச் 30-ந்தேதி தேர்தல்

சென்னை, ஜன.19- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் 25 உறுப்பினர்களை மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த 25 பேரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதால், உறுப்பினர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் […]

Loading

செய்திகள்

தேர்தல் வருவதால் ‘லேப்டாப்’ நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.18: நான்கரை ஆண்டுகளாக மாணவர்களை வஞ்சித்துவிட்டு இப்போது தேர்தல் வருவதால் மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ வழங்க நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். ஜெயலலிதா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைத்து வகைகளிலும் அறிவுப்பூர்வமாக கல்வி பயின்று, தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தமது ஆட்சிக் காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி சாதனை படைத்தார். ஜெயலலிதா வழியில் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், […]

Loading

செய்திகள்

கரூர் த.வெ.க. கூட்டத்தில் பெரும் சோகம்: நெரிசலில் சிக்கி 39 பேர் பலி; பலர் படுகாயம்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு விவரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த தகவலின்படி, […]

Loading

செய்திகள்

’’ஏழை மக்களின் கிட்னி திருடும் எம்.எல்.ஏ.வை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்: இபிஎஸ் வேண்டுகோள்

தருச்சி, ஆக.25 – ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணச்சநல்லூர் தொகுதியில் துறையூர் பிரதான சாலையில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார். “மணச்சநல்லூர் என்றாலே பொன்னி அரிசிதான் ஞாபகம் வரும். இங்கு விளையும் அரிசி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த தொகுதியில் பேசுவது மகிழ்ச்சி. நானும் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்தவன். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிறைய திட்டங்கள் கொடுத்தோம். […]

Loading

செய்திகள்

ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான்: விஜய்க்கு எடப்பாடி பதிலடி

உத்தரமேரூர். ஆக. 22– ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல், உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான் என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துவிட்டு, மறைந்த முதல்வர் அண்ணாவின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, ஆக. 18– துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்: ‘இந்தியா’ கூட்டணி முடிவு

புதுடெல்லி, ஆக.11- துணை ஜனாதிபதி தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். யாரை நிறுத்துவது என்பதில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த மல்லிகார்ஜுன கார்கே முயன்று வருகிறார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி, மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் […]

Loading