தஞ்சாவூர், ஜன.27- நடைபெற உள்ள தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தமிழகத்துக்கும் இடையேதான் போட்டி என்று தஞ்சையில் நடந்த தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கூறினார். தஞ்சையை அடுத்த செங்கிப் பட்டியில் டெல்டா மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றார். மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை […]
![]()




