செய்திகள் முழு தகவல்

பொங்கல் பண்டிகை கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: நாளை டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

சென்னை, டிச. 3: பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

விழுப்புரம், டிச.25- விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ருவண்ணாமலையில் ஆய்வுப்பணியை முடித்து விட்டு மாலையில் தனி ஆய்வு ரெயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன் […]

Loading

செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக் கூடாது: தெற்கு ரெயில்வே வலியுறுத்தல்

சென்னை, டிச. 3– ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலைக்கான வருடாந்திர யாத்திரை சீசனில் ஐயப்ப பக்தர்கள் தங்களது பயணக் காலத்தில் பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதே இந்த வேண்டுகோளின் நோக்கம் ஆகும். ரயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது ஒரு கடுமையான தீ அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு சிறிய தீ சுடர்கூட […]

Loading

செய்திகள்

மார்ச் மாத இறுதிக்குள் படுக்கை வசதி கொண்ட 8 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு

சென்னை, நவ.15- அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் படுக்கை வசதி கொண்ட 8 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது. இதுவரையில் இந்தியா முழுவதும் 92 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் […]

Loading

செய்திகள்

ஆயுதபூஜை: மதுரை, செங்கோட்டை, திருவனந்தபுரத்திற்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள்

தெற்கு ரெயில்வே அறிவிப்பு சென்னை, செப். 29– ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கூடுதலா சில சிறப்பு ரெயில்களை இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை இரவு 10.15 மணிக்கு சென்னை […]

Loading