செய்திகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் வெளுத்து வாங்கிய கனமழை

தூத்துக்குடி, நவ. 24 திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் வெளுத்து வாங்கிய கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன முதல் […]

Loading

செய்திகள்

மரத்தில் கார் மோதி விபத்து: 4–ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் , கடற்கரை சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களான முகிலன் (வயது 23), ராகுல் ஜெபஸ்டின், சாரூபன் ஆகிய […]

Loading

செய்திகள்

கடல் மாநாடு: தூத்துக்குடி கடலில் படகில் சென்று சீமான் ஆய்வு

தூத்துக்குடி, அக். 4– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல் மாநாடு நடத்துவது குறித்து, தூத்துக்குடி மாவட்டம் அமலி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவர்களுடன் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார். ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது என்று கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே ‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை […]

Loading

செய்திகள்

தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டிகள் திருட்டு: மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது

சேலம், ஆக. 26– தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டிகளை திருடிவிட்டு ரெயிலில் மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலம் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டிகளை திருடிய இளைஞர் மும்பை தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், சேலம் ரயில்வே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி, டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடியுடன், எடப்பாடி சந்திப்பு: ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம்

சென்னை, ஜூலை.24- பிரதமர் மோடியுடன், எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தெரிகிறது. எனவே அவர், தனது ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார். பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27-ந் தேதி என 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26ந் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு திருச்சி செல்கிறார். […]

Loading

செய்திகள்

மதுரை – தூத்துக்குடி 4 வழி சாலையில் லாரியும் வேனும் மோதல்: 3 பேர் பலி

விருதுநகர், ஜூலை 10– அருப்புக்கோட்டை அருகே லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் மற்றும் கிளீனர் என 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி 4 வழிச் சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 3 பேர் பலி இந்த விபத்தில் 2 வாகனங்களின் ஓட்டுநர்களும், மற்றும் ஒரு கிளினர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே […]

Loading