செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்: எடப்பாடி

சென்னை, ஜன. 21: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தீயசக்தி தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு […]

Loading

செய்திகள் முழு தகவல்

‘100 சதவீத உழைப்பைக் கொடுத்து தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 21: 100 சதவீத உழைப்பை கொடுத்து தேர்தல் களப்பணியாற்றுங்கள் என்று தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் முதல் வாரம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.மு.க. உட்பட பல்வேறு கட்சியினர் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர்

சேலம், ஜன. 5: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.மு.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர். அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (4–ந் தேதி), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், தி.மு.க-வைச் சேர்ந்த, வி.சி. வரதராஜ் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர் வி.பி. முத்துசாமி, […]

Loading

செய்திகள்

மாவட்ட செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை, ஜன. 5– மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் 9–ந்தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் […]

Loading

செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க செயற்கை நுண்ணறிவு ‘போர்ட்டல்’: முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம்

சென்னை, ஜன. 4: தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ‘போர்ட்டலை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மொத்தம் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர். இதன் தொடக்க நிகழ்வாக சென்னை […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ரூ.2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 1– திமுக ஆட்சியில் ரூ.2.20 லட்சம் கோடி மாயமாகிவிட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் […]

Loading

செய்திகள்

சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, டிச. 29: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Loading

செய்திகள்

பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

திருப்போரூர், டிச. 29: பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார். 6வது கட்டமாக நேற்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள இஜ்திமா திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணைய அதிகாரி தகவல்

சென்னை, டிச.29- தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு தீவிர முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் படிவங்களை வழங்கினர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத […]

Loading

செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஒரு தீயசக்தி, த.வெ.க. ஒரு தூயசக்தி என்று விஜய் ஆவேசம்

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் […]

Loading