செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள்: ஸ்டாலின் திறந்தார்

சென்னை, ஜன. 21: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்தார். மேலும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை […]

Loading

செய்திகள்

வேலூரில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி: கலெக்டர் சுப்புலெட்சுமி திறந்தார்

வேலூர், டிச. 30: வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தும் கைவினை பொருட்கள் கண்காட்சியை வேலூர் நகர அரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், லட்சுமணசாமி டவுன் ஹால், டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் என்ற இடத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சேலம் நடத்தும் “கைவினை கண்காட்சி” என்ற சிறப்பு கைவினைப் பொருட்கள், கைத்தறி, துணி […]

Loading

செய்திகள்

ரூ.22 கோடியில் காவல்துறையில் கட்டிடங்கள் 9 புதிய காவல் நிலையங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, டிச. 22: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அதிநவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ.24– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டஅம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலைஞர் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபொழுது 10.4.1967 அன்று அம்பத்தூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார்

விழுப்புரம், நவ. 20 வீடூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திண்டிவனம் தாலுகா வீடூர் கிராமத்தில் வீடூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 32 அடி ஆகும். தற்போது பெய்த பருவமழையின் காரணமாக அணையில் தற்போது 30.3. அடி தண்ணீர் உள்ளது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் […]

Loading