செய்திகள்

சிஎஸ்கே–திருவள்ளூர் கிரிக்கெட்: கொரட்டூர் எபினீசர் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது

திருவள்ளூர், ஜன. 2026: சிஎஸ்கே–திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டிசிஏ) சார்பில் நடந்த 2025–26ம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொரட்டூர் எபினீசர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணி, வேலம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த எபினீசர் பள்ளி அணி 30 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் ஏ. பரிநய் ஜெயின் (39) மற்றும் கே. தமிழ் செல்வம் […]

Loading

செய்திகள்

20 விவசாயிகளுக்கு ரூ. 29 லட்சம் நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வழங்கினார்

திருவள்ளூர், டிச. 31– திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20 விவசாயிகளுக்கு ரூ.28,81,751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் 2025-–26 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் […]

Loading

செய்திகள்

போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: எடப்பாடி குற்றச்சாட்டு

திருவள்ளூர், டிச. 30: தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். ’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருத்தணி தொகுதியில் எழுச்சியுரை ஆற்றினார். இதையடுத்து திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் – ஊத்துகோட்டை சாலை புதிய பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘’அண்ணா திமுக கூட்டணி அடுத்தாண்டு […]

Loading

செய்திகள்

டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் எடுத்து இளம் வீரர் விஹான் அபாரம்

திருவள்ளூர், டிச.24: திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 12 வயதுக்குட்டுப் பட்டவர்களுக்கான டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி பட்டாமிராமி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜேந்திர நாயுடு தொடங்கி வைத்தார். முதல் நாளில் 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வேலூர் அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. எஸ். மிதுன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி வழங்கினார்.

திருவள்ளூர், நவ. 25– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]

Loading

செய்திகள்

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு :

சென்னை 23: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் அருகே மின்சாரத்தை துண்டித்து ‘டிரான்ஸ் பார்மரை’ திருடிய கும்பல்

திருவள்ளூர், செப். 21– திருவள்ளூர் அருகே மின்சாரத்தை துண்டித்து ‘டிரான்ஸ் பார்மரை’ திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த குன்னவளம் கிராமத்தில் உள்ள வயல்வெளி அருகே மின்கம்பத்தில் டிரான்ஸ் பார்மர் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் மின் இணைப்பு துண்டித்து மின்கம்பத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரை தனியாக கழற்றி திருடி சென்றனர். சிறிது தூரத்தில் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியை வீசிவிட்டு அதில் இருந்த செம்புகம்பிகள் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர். இன்று […]

Loading

செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு ஆவடி, ஆக. 21– சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.15000 அபராதம் விதித்து திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு 6.01.2019 அன்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டில்லி பாபு (22) என்பவர் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் […]

Loading

செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: 2 நாட்களாய் போலீசுக்கு ‘டிமிக்கி’ கெொடுத்து வந்து மேற்கு வங்காளத்து இளைஞன் கைது

கும்மிடிப்பூண்டி, ஜூலை 26– கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 நாட்களாய் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த மேற்கு வங்காள இளைஞன், சூளூர்ப்பேட்டை ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டான். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் ரெயில் தீ விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருவள்ளூர், ஜூலை 14– திருவள்ளூர் அருகே ரெயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வழித்தடத்தில் தற்போது மின்சார ரெயில் சேவை சீரானது. திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உயர் ரக டீசல் ஏற்றி வந்த ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட உராய்வினால் டேங்கர்களில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. . இந்த தீயானது மளமளவென்று பரவி, அடுத்தடுத்து 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து […]

Loading