சென்னை, ஜன.20-– வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், மலேசியா நாட்டில் உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளில், திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதற்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் 6 திருவள்ளுவர் சிலைகளை, மலேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பா.கு.சண்முகத்திடம் வழங்கினார். இதுகுறித்து வி.ஜி.சந்தோசம் கூறும்போது, ‘வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் உலகமெங்கும் […]
![]()



