செய்திகள்

அமமுகவில் இருந்து மாணிக்கராஜா நீக்கம்: ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 23– அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜவை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு மாணிக்கராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மாணிக்கராஜவை அமமுகவில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘கழகத்தின் கொள்கை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சேலம், நவ. 22: சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. […]

Loading

செய்திகள்

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது

சென்னை, அக். 26– தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியை படுகொலை செய்யும் செயலுக்கு எதிராக பா.ம.க. […]

Loading

செய்திகள்

திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சட்டமன்றத் தேர்தலில், சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. இவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இருந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை, வீட்டில் ஓய்வெடுத்து வந்த பொன்னுசாமிக்கு திடீரென்று இதயத்தில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]

Loading

செய்திகள்

கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுப்போம்: டெல்லியில் ஆதவ் அர்ஜுனா பேட்டி

புதுடெல்லி, அக். 13– த.வெ.க. மாவட்டச் செயலாளர்களை கைது செய்து கட்சியை முடக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 7-–ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்:

பொள்ளாச்சி, செப்.11-– அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சியில் விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடலின்போது எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த அவர், பொள்ளாச்சியில் பல்வேறு அமைப்புகளுடன் […]

Loading

செய்திகள்

வேரோடு பிடுங்கி எறிந்தால் தி.மு.க. பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி

நெல்லை, ஆக. 23– அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக […]

Loading

செய்திகள்

அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள்: அன்புமணிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் காட்டமான பதில்

சென்னை, ஆக.18– சொந்த கட்சியில் பதற்றம் தீரும் வரை அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள் என்று அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து- வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்’’ என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 […]

Loading

செய்திகள்

கவர்னரை வைத்து இழிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.

தர்மபுரி, ஆக.17– கவர்னரை வைத்து தமிழ்நாட்டில் இழிவான அரசியல் நடத்துகிறது பா.ஜ.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் […]

Loading

செய்திகள்

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

தி.மு.கவினர் தர்ணா போராட்டம்; பரபரப்பு திண்டுக்கல், ஆக. 16– திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழநி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக இன்று காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு 3 வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி […]

Loading